பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x

முசிறி அருகே பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

முசிறி, ஜூலை.30-

முசிறி அருகே ஆனைப்பட்டி கிராமத்திற்கு அரசு பஸ்கள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பஸ் சரியான நேரத்தில் வராததால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பஸ் சரியான நேரத்தில் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஆனைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முசிறி போலீசார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முசிறி கிளை மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ்கள் சரியான நேரத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் முசிறி-புலிவலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story