வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பாத்திரங்கள் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பாத்திரங்கள் கொள்ளை
x

குடவாசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பாத்திரங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்

குடவாசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பாத்திரங்களை கொள்ளையடித்த ு சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூட்டு உடைப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அரசவனங்காடு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டு புதுமனை புகு விழாவிற்கு சென்று இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 கிராம் தோடு, ஜிமிக்கி, 2 வெள்ளி குத்துவிளக்குகள், 5 வெள்ளி டம்ளர்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவியை காணவில்லை.

போலீசார் வலைவீச்சு

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ராகவன் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story