மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி


மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி
x

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி மணியக்காரர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் லட்சுமி (வயது 29). இவர் பள்ளப்பட்டி சிப்காட் பகுதியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மொபட்டில் வேலைக்கு சென்று விட்டு இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாண்டியராஜபுரத்திலிருந்து பெருமாள்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி லட்சுமி காதில் அணிந்திருந்த அரை கிராம் தங்கத்தோடு, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறி திருடர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story