இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொள்ளை


இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொள்ளை
x

விழுப்புரத்தில் இருசக்கர வாகன ஷோரூமின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு அதன் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கடையை திறந்து பார்த்தபோது பின்பக்க ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

ரூ.1 லட்சம் கொள்ளை

மேலும் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், ஷோரூமின் பின்பக்க ஜன்னல் கம்பியை ஆஷாபிளேடால் அறுத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கடையில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story