நிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி


நிலவுக்கான இந்திய தூதராக மாறும் ரோவர், லேண்டர்: சிக்னல் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி
x

கோப்புப்படம்

நிலவில் உறக்க நிலையில் இருந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கி ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.

அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவுக்கான இந்திய தூதர்

அப்போது, நிலவின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருந்தது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியம் இல்லை. இருந்தாலும் அவற்றை மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 22-ந்தேதி நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் முடிந்து தற்போது சூரிய ஒளி பட தொடங்கி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி கடந்த 22-ந்தேதி மீண்டும் அதனை செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தவறும் பட்சத்தில், பிரக்யான் ரோவரையும், விக்ரம் லோண்டரையும் இனி நிலவுக்கான இந்திய தூதராகதான் இவை இரண்டும் மாறும் நிலை ஏற்படலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story