உண்டியல்களில் ரூ.1 கோடியே 4 லட்சம் காணிக்கை


உண்டியல்களில் ரூ.1 கோடியே 4 லட்சம் காணிக்கை
x

உண்டியல்களில் ரூ.1 கோடியே 4 லட்சம் காணிக்கை கிடைத்தது.

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே, 4 லட்சத்து, 73 ஆயிரத்து, 444-ம், 2 கிலோ 55 கிராம் தங்கமும், 3 கிலோ 80 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 235-ம், வெளிநாட்டு நாணயங்கள் 1,812-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story