"நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம்" - மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது


நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் - மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
x
தினத்தந்தி 6 July 2022 8:33 AM GMT (Updated: 6 July 2022 8:54 AM GMT)

நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

சென்னை,

நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கும் மத்திய அரசு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.

அதன்படி வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணையம் மூலமாக ரூ.10,000 கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலத்தடி நீருக்கு ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.



Next Story