பலசரக்கு கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவில் ஜெகதலபாண்டியன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந் ஜெகதலபாண்டியன் கடையின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு வைத்து இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





