தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி


தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
x

பரமத்திவேலூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர்‌ இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேலூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையைச் சேர்ந்த திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story