புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:46 PM GMT)

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 45), ராதாகிருஷ்ணன் (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story