காமதேனு வாகனத்தில் சாமி வீதிஉலா

குளுந்தமா காளியம்மன் கோவிலில் காமதேனு வாகனத்தில் சாமி வீதிஉலா
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரியில் புகழ்பெற்ற குளுந்தமா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பெரும் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





