தர்மபுரி அருகே நுரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


தர்மபுரி அருகே நுரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2023 7:00 PM GMT (Updated: 18 Jun 2023 1:37 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி அருகே மொடக்கேரி சிவன் கோவில் அருகே சிலர் நுரம்பு மண்ணை அள்ளி டிப்பர் லாரியில் ஏற்றுவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், சிவபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அரசின் அனுமதி பெறாமல் நுரம்பு மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் அதில் ஏற்றப்பட்ட நுரம்பு மண்ணை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story