மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்


மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருடப்படுவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு 4 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து , தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story