தூய்மை பணியாளர்கள் தர்ணா


தூய்மை பணியாளர்கள் தர்ணா
x

ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

தர்ணா போராட்டம்

வேலூர் மாநகராட்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி, கொசு ஒழிப்பு பணி, குப்பைகள் தரம் பிரிக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் மாநகராட்சி 2-வது மற்றும் 3-வது மண்டலத்தை சேர்ந்த சுமார் 800 தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என =கோரிக்கை வைத்து வந்தனர். எனினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

வேலையை புறக்கணித்து...

இதனால் அவர்கள் வேலையை புறக்கணித்து, கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் முன்பு அமர்ந்து சம்பளம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தூய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்குவதாக தெரிவித்தனர்.

தொடர் நடவடிக்கையின் காரணமாக அவர்களது சம்பளமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story