மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 6 Jun 2023 12:30 AM IST (Updated: 6 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றத்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வழக்கறிஞா்கள் சங்க தலைவா் வெங்கடேசன், துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் கார்த்திகைராஜன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நீதிபதி சுனில்ராஜா, மரக்கன்றுகளை நட்டி, நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இதில் வழக்கறிஞா்கள் மாரியப்பன், நித்யானந்தம், வெங்கடேஷ், சிதம்பரம், வீரபாண்டி, கணேசன் நல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

1 More update

Next Story