மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x

நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ச.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான சி.ரவிவர்மன் முன்னிலையில், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பெருமாள், முருகேசன், மாதலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story