மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குட்பட்ட அட்டை குளத்திற்கு நீர் வரும் பாதைகள் தூர்வாரப்பட்டு அதன் நான்கு கரைகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story