சப்பர பவனி

சிவகிரியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சப்பர பவனி நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மன் கோவிலில் கிருஷ்ணர் சிலையை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை யாதவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





