வாலிபர் மாயம்


வாலிபர் மாயம்
x

வாலிபர் மாயம் ஆனார்.

கரூர்

மாயனூர் அருகே உள்ள பால்ராசபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூருக்கு கட்டிட வேலைக்கு சென்றார். ஆனால் இதுவரை நாள் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சக்திவேலை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேலின் தந்தை முருகேசன் மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சக்திவேலை தேடி வருகின்றனர்.


Next Story