அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க விலையில்லா சைக்கிள் தயார்


அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க விலையில்லா சைக்கிள் தயார்
x
தினத்தந்தி 12 Jun 2023 3:31 AM IST (Updated: 12 Jun 2023 7:28 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள் தயார் நிலையில் உள்ளன.

ஈரோடு

அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சைக்கிள் தயார் நிலையில் உள்ளன.

விலையில்லா சைக்கிள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, நோட்டு புத்தகங்கள், சைக்கிள்கள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களுக்கும் ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின.

பிளஸ்-1 மாணவ-மாணவிகள்

இதைத்தொடர்ந்து சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சைக்கிள்கள் முழுமையாக பொருத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விலையில்லா சைக்கிள்களை வாங்குவதற்கும் மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 படிக்கும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட உடன் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story