பள்ளிக்கூட ஆண்டு விழா


பள்ளிக்கூட ஆண்டு விழா
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளிக்கூட ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள எம்.எம். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு எம்.எம். அறக்கட்டளை நிர்வாகத்தினர் எஸ்.எம்.பி.சாகுல்ஹமீது, எஸ்.அப்துல் காதர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் முதல்வர் எல்.பெல்சியா ரோஸி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

விழாவில் படிப்பு, விளையாட்டு உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவ- மாணவிகளின் நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் விஜய் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story