குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பலி


குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 17 April 2023 8:57 PM GMT (Updated: 18 April 2023 9:15 AM GMT)

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்தார்.

திருச்சி

தா.பேட்டை:

கோவிலுக்கு வந்தனர்

திண்டுக்கல் மாவட்டம், கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி என்ற பட்டாணி. இவரது மகள் ஹரிணி (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் பிச்சைமணி தனது மகள் ஹரிணி, தந்தை ராசு மற்றும் உறவினர்களுடன் திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே திருத்தலையூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற கிடா வெட்டு வழிபாட்டிற்காக வந்துள்ளார்.

பிணமாக மீட்பு

அப்போது ஹரிணி தனது தாத்தா ராசுவுடன் திருத்தலையூர் சிவன் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக ஹரிணி தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ராசு தனது பேத்தியை குளத்தில் தேடிய நிலையில் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குளத்திற்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கிய ஹரிணியை தேடினர். இந்நிலையில் அவரை பிணமாக மீட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ஹரிணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலுக்கு வந்த பள்ளி மாணவி குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story