பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை


பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x

பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

விஷம் குடித்தார்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மகாதேவி(வயது 35). இவர்களுக்கு முகிலன் (17), மனோஜ் (15) என 2 மகன்கள் உண்டு. இதில் முகிலன் ஒரு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பும், மனோஜ் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். முருகானந்தம் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். மகாதேவி தற்போது சத்துணவு ஊழியராக பணியாற்றி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால், அவர்களுக்கு சொந்தமான வயலில் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு மருந்தடிக்க முகிலன் மற்றும் மனோஜ் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மனோஜுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாமல் அவர் பருத்திக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளார்.

சாவு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முகிலன் இது பற்றி அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மனோஜை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு சென்று மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story