மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பள்ளி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பள்ளி மாணவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

பள்ளி மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகினேஸ்புரம் கிராமம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவரது மகன் விஷால்(வயது 17). இவரது உறவினர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அறிவுக்கரசனின் மகன் ஜான் மகேஷ்குமார்(16).

இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதினார். பின்னர் விடுமுறைக்காக அகினேஸ்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார்.

சாவு

இந்நிலையில் நேற்று முன்தினம் விஷாலும், ஜான் மகேஷ்குமாரும் அகினேஸ்புரம் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கூவத்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பானி பூரிகடைக்கு வந்தனர். அங்கு பானிபூரி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜான் மகேஷ்குமார் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

பலத்த காயமடைந்த விஷாலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு சென்று ஜான் மகேஷ் குமார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் மோதி பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story