கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x

திண்டுக்கல்லில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், வெற்றி பெற்ற அணிகளும் பங்கேற்றன. அதன்படி, ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

அதில் தெருக்கூத்து நாடகம் பிரிவில் மாணவிகள் அணி, கவின்கலை பிரிவில் மாணவன் வெள்ளைச்சாமி, நுண்கலை பிரிவில் மாணவன் சிவமணி ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் நடனம், கவிதை புனைதல், வீதிநாடகம், ஓவியம், பாவனை நடிப்பு போன்ற பிரிவுகளில் 2-ம் இடம் பிடித்து மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா, உதவி தலைமை ஆசிரியர்கள் காளிமுத்து, முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story