அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
x

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி என்ற பிரசாரத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அனுப்பியுள்ள கடிதத்தை மேற்கொள்காட்டி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(நாட்டு நலப்பணித்திட்டம்) சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story