அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சீருடை


அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சீருடை
x

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புதிய சீருடை

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் ஒன்றிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பருவக்கல்வி பயிலும் குழந்தைகள் புதிதாக வழங்கப்பட்ட சீருடைகள் அணிந்து ஆர்வமுடன் நேற்று வருகை புரிந்தனர். இதுகுறித்து காங்கயம் வட்டாரம் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ரா.மோகனாம்பாள் கூறும்போது " அணைந்து அங்கன்வாடி மையங்களிலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவுப்படி குழந்தைகளுக்கு தலா 2 சீருடைகள் வழங்கப்பட்டடுள்ளது. இதன்மூலம் காங்கயம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 89 அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.என்றார்.



Related Tags :
Next Story