சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-ந் தேதி பள்ளிகள் செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-ந் தேதி பள்ளிகள் செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு
x

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆகஸ்ட் 27-ந் தேதி பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜூலை 28-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 27-ம் தேதியன்று வேலை நாள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட்27-ம் தேதி சனிக்கிழமையன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


Next Story