அறிவியல் மைய ஊழியர் விபத்தில் சாவு


அறிவியல் மைய ஊழியர் விபத்தில் சாவு
x

நெல்லையில் அறிவியல் மைய ஊழியர் விபத்தில் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோமதி சங்கர் (வயது 25). இவர் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அறிவியல் மையத்திற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார். நெல்லை டவுன் நயினார்குளம் அருகே வந்தபோது அந்தப் பகுதியில் தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தன. அப்போது கோமதிசங்கர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதிசங்கர், பஸ் மோதி இறந்தாரா அல்லது வேறு வாகனங்கள் ஏதேனும் மோதி கீழே விழுந்து இறந்தாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story