சேலத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


சேலத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
சேலம்

சேலம்

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது22). இவருடைய நண்பர் பிரகாஷ் (27). சம்பவத்தன்று 2 பேரும் சன்னியாசிகுண்டு பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் அங்கு வந்தனர். இதில் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story