சேலத்தில்பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டுபோலீசார் விசாரணை


சேலத்தில்பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டுபோலீசார் விசாரணை
x

சேலத்தில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்

சேலத்தில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன்

சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் அரவிந்தன். இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவரது மனைவி ரம்யா. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் தரணேஷ் (வயது12). இவன், 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். ரம்யாவுடன் அவரது தம்பி மனோஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தரணேஷ் வீட்டில் இருந்தார். வழக்கம்போல் ரம்யா வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை ரம்யாவின் தந்தை வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்து ரம்யாவின் தம்பி மனோஜ் என்பவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் ரம்யாவின் தந்தை, உள்ளே சென்று பார்த்தபோது, தரணேஷ் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை அவரது தாய்மாமன் மனோஜ் அரிவாளால் வெட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story