அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல்
x

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடையை நடத்தி வந்த போலி டாக்டர் தலைமறைவானார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடையை நடத்தி வந்த போலி டாக்டர் தலைமறைவானார்.

வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப் பண்ணை மீனவர் கிராமத்தில் அசாருதீன் என்பவர் பேபி என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அனுமதி பெறாமல் கடை நடத்தி வந்ததாகவும், மேலும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கும் வீடியோ ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்து உள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட இணை இயக்குனர் (மருந்தகம்) சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், திருவாடானை முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், உப்பூர் கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி ஆகியோர் விசாரணை நடத்த சென்றனர்.

கடைக்கு சீல்

அங்கு அசாருதீன் இல்லாததால் மருத்துவ அதிகாரிகள் திருப்பாலைக்குடி போலீஸ் உதவியுடன் கடையின் பின்புறத்தை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். அங்கு அரசு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்பனை செய்து வந்ததும் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்ததையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடையின் உள்புறத்தை வீடியோ எடுத்து கடையில் இருந்த ரூ. 10 ஆயிரத்து 210-ஐ கைப்பற்றி பணத்தையும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சியையும் திருப்பாலைக்குடி போலீசில் ஒப்படைத்தனர். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப் பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் அசாருதீனை வலைவீசி தேடி வருகின்றார்.


Next Story