சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை: சென்னை காவல்துறை விளக்கம்


சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை:  சென்னை காவல்துறை   விளக்கம்
x

சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.


Next Story