பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:46 PM GMT)

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் அதன் செயல் அலுவலர் கவிதா சுகாதார துறையினருடன் இணைந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஓட்டல், இறைச்சி, மீன் கடைகளில் அவை பயன்பாட்டில் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.


Next Story