அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்
x

அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே குண்டுகுளம் கிராமம் கானல் ஓடை பகுதிகளில் திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கானல் ஓடையில் அனுமதியின்றி சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து போலீசார் டிராக்டரை சோதனை செய்ததில் அதில் ½ யூனிட் மணல் அனுமதியின்றி ஏற்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story