கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா விற்ற வாலிபருக்கு வலைவீச்சு


கண்டாச்சிபுரம் அருகே  கஞ்சா விற்ற வாலிபருக்கு வலைவீச்சு
x

கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கணக்கன்குப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பகுதியில் நேற்று செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அவரை சுற்றி சில மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் அருகே சென்றார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து சிதறி ஓடிவிட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு, அந்த வாலபரும் ஓடிவிட்டார்.

அருகே சென்று பார்த்த போது, 230 கிராம் கஞ்சா பொட்டலம் கிடந்தது. இதன் பின்னர் தான் அந்த வாலிபர் கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் மோட்டார் சைக்கிள், கஞ்சாவை கைப்பற்றி அவர் கண்டாச்சிபுரம் போலரீசில் ஒப்படைத்தார். தப்பி ஓடிய வாலிபர் குறித்து விசாரித்தில், அவர் கணக்கன்குப்பம் கிராமம் சனிமூலை தெருவை சேர்ந்த சுப்புராயன் மகன் சின்னதுரை (வயது 30) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சின்னதுரயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story