செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


செம்மண் குவாரி வழக்கு:    அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

செம்மண் குவாரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


அப்போது கோபிநாத், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story