தொடர் திருட்டு: 2 சிறுவர்கள் சிறையில் அடைப்பு


தொடர் திருட்டு:  2 சிறுவர்கள் சிறையில் அடைப்பு
x

அரவக்குறிச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கரூர்

அரவக்குறிச்சி செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராம்குமார் (வயது 43). இவர் பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் இரும்பு பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து அவர் அரவக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், 16, 18 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் தான் கடையில் இரும்பு பொருட்களை திருடினர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவர்கள் அரவக்குறிச்சி கடைவீதி, செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சந்தைப்பேட்டை தெரு போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார் 2 சிறுவர்களை கைது செய்து, கரூர் இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி இளம் சிறார் சிறையில் அடைத்தனர்.


Next Story