தொப்பூர் கணவாயில்கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்


தொப்பூர் கணவாயில்கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:30 PM GMT (Updated: 4 Oct 2023 7:30 PM GMT)

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கன்டெய்னர் லாரி

பெங்களூருவில் இருந்து துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி கன்டெய்னர் லாரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் (வயது 44) என்பவர் ஒட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. அப்போது, கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதிவிட்டு கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.


Next Story