வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு


வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு
x

வேடசந்தூர் அருகே வைக்கோல் படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர், தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். மர்ம நபர்கள் 2 பேர் தோட்டத்துக்குள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மின் மோட்டாரின் வயரை அறுத்து எடுத்தனர். மேலும் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி வைக்கோல் படப்புக்கு தீ வைத்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். சிறிதுநேரத்தில் வைக்கோல் கொழுந்து விட்டு எரிந்தது.

இதற்கிடையே திடுக்கிட்டு எழுந்த பழனிசாமி, வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து வைக்கோல் படப்பில் பற்றிய தீயை அணைத்தார். ஆனால் அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story