உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


உளுந்தூர்பேட்டை அருகே        சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

பாலியல் தொல்லை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள் 14 வயது சிறுமி. சம்பவத்தன்று இவள் தனது வீட்டு முன்பு கோலம் போடுவதற்காக வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் முருகன் (வயது 48) என்பவர் வீட்டின் முன்பு நின்று வாசலை பெருக்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டாள்.

இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, முருகனை மடக்கி பிடித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொழிலாளி கைது

மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான முருகன் கூலி த்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story