விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - 44 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை


விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - 44 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை
x

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 44 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 44). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கையை பிடித்து அழைத்து சென்று முத்தம் கொடுத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

இதனை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. வழக்கு விசாரணை முடிவடைவதையடுத்து நீதிபதி ஆனந்தன்‌, சிறுமியை பாலியல் சீண்டல் செய்த பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story