பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது


பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
x

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

சேலம் மாவட்டம், அமாலகொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் க.பரமத்தி அருகே உள்ள கிரசர் மேடு பகுதியில் வாஷிங் பவுடர், சோப்பு ஆயில் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், க.பரமத்தி அனைத்து மகளிர் போலீசார் ராமச்சந்திரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story