1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு


1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு
x

திருவாரூரில் இருந்து தூத்துக்குடிக்கு 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பெறப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். அந்தவகையில், நேற்று தூத்துக்குடிக்கு 1,250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1 More update

Next Story