தமிழகம் முழுவதும், சதுர்த்தியை முன்னிட்டு 5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் தகவல்


தமிழகம் முழுவதும், சதுர்த்தியை முன்னிட்டு  5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் தகவல்
x

தமிழகம் முழுவதும், சதுர்த்தியை முன்னிட்டு 5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் தகவல்

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள கருங்கல்பாளையத்தில் மக்கள் நல சேவை இயக்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- இந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவசேனா கட்சி சார்பில் 5,001 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கொரோனா இல்லாததால், தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். அனுமதி மறுத்தால், தடையை மீறி ஊர்வலம் நடத்தி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். மத்திய அரசு அமலாக்க துறையை வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கு முறை செய்து நசுக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story