சினிமாவில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை


சினிமாவில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை
x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா குறும்பட இயக்குநர் சத்தியபிரகாஷுக்கு சிறையுடன் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மதுரவாயலை சேர்ந்த சத்தியபிரகாஷுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம், அபராத தொகையில் ரூ.55 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.


Next Story