கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்கநெய்வேலியில் முற்றுகை போராட்டம்


கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்கநெய்வேலியில் முற்றுகை போராட்டம்
x

கர்நாடகத்துக்கு மின்வினியோகத்தை தடுக்க நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது என நாமக்கல்லில் விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நாமக்கல்

நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:-

கர்நாடக அரசு காவிரி தண்ணீரை திறந்து விட மறுப்பு தெரிவிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். ஆணைய உத்தரவை தொடர்ந்து பின்பற்றாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் மின்சாரம் செல்கிறது. அதை தடுத்து கர்நாடகத்திற்கான மின்சார வினியோகத்தை தடை செய்யும் வகையில் வருகிற 9-ந் தேதி நெய்வேலி அனல் மின்நிலையத்தின் 2-வது உற்பத்தி நிலையப் பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய இயக்கங்கள் திரளாக கலந்து கொண்டு கர்நாடக அரசின் ஜனநாயக விரோத போக்கிற்கான எதிர்ப்பை பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றார்.


Next Story