தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.12½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.12½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நேற்று இந்த அங்காடிக்கு 1,800 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.735-க்கும், குறைந்தபட்சமாக ரூ.585-க்கும், சராசரியாக ரூ.689.89-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 42 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

1 More update

Next Story