ரூ.7½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.7½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.7½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1,262 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.677-க்கும், குறைந்தபட்சமாக ரூ.301-க்கும், சராசரியாக ரூ.606.43-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 775 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story