கொத்தனார் கோடாரியால் வெட்டி படுகொலை


கொத்தனார் கோடாரியால் வெட்டி படுகொலை
x

திங்கள்சந்தை அருேக போதையில் தகராறு செய்த கொத்தனாரை தந்தை வெட்டி கொலை ெசய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருேக போதையில் தகராறு செய்த கொத்தனாரை தந்தை வெட்டி கொலை ெசய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கொத்தனார்

திங்கள்சந்தை அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 80). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் நாகராஜன் (40) உள்பட 2 பேருக்கு திருமணம் ஆகவில்லை.

நாகராஜன் கேரளாவில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து தந்தையுடன் தகராறு செய்வது வழக்கம்.

இந்தநிலையில் நாகராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டார்.

கோடாரியால் வெட்டினார்

அப்ேபாது வீட்டில் இருந்த ெபாருட்களை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகன் இடைேய மோதல் ஏற்பட்டு இருவரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சவுந்தரபாண்டியன் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து நாகராஜனின் கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

பின்னர் சவுந்திரபாண்டியன் ரத்தம் படிந்த கோடாரியுடன் இரணியல் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு தனது மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்மூர்த்தி, சந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நாகராஜனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திரபாண்டியனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதையில் தகராறு செய்த மகனை தந்தையே வெட்டி கொலை ெசய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story